உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நகராட்சிகளில் தேர்தல் உதவியாளர் நியமனம்

நகராட்சிகளில் தேர்தல் உதவியாளர் நியமனம்

தேனி : உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றுவதற்கான தேர்தல் உதவியாளர்கள் பதவி உயர்வு மூலம் நகராட்சிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. 12 ஆயிரத்து 618 ஊராட்சி தலைவர்கள், 40 ஆயிரத்து 879 ஊராட்சி வார்டுகள், 6,570 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 656 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 385 ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் பதவிகளுக்கும், நகராட்சி, பேரூராட்சி வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இப்பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. வாக்காளர் சரிபார்ப்பு பணிகள் நடக்கின்றன. இந்நிலையில், நகராட்சிகளில் இப்பணிகளை மேற்கொள்ளவும்,தேர்தலுக்கான அடிப்படை பணிகளை மேற்கொள்ளவும், நகராட்சிகளில் பணியாற்றும் 150 இளநிலை உதவியாளர்கள், பதவி உயர்வு மூலம் தேர்தல் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ