முதியவரை தாக்கியவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை
தேனி: ஆண்டிபட்டி தாலுகா சிங்கராஜபுரம் ஒச்சம்மாள் இவரது கணவர் முதலி 60. இவர்களது தோட்டம் கல்லுான்டான் சுனை செல்லும் ரோட்டில் உள்ளது. இவர்கள் தோட்டம் அருகே அதே பகுதியை சேர்ந்த தமிழன் 58, தோட்டம் உள்ளது. ஒச்சம்மாள் தோட்டத்தில் பயிர்களை தமிழன் கால்நடைகள் மேய்ந்தன. இதனை முதலி விரட்டினார். ஆத்திரமடைந்த தமிழன், இவரது மனைவி ஜெயலட்சுமி 52 இணைந்து முதலியை தாக்கினர். ஒச்சம்மாள் புகாரில் வருஷநாடு போலீசார் விசாரித்தனர். இந்த வழக்கின் விசாரணை தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி சரவணன் நேற்று வழங்கிய தீர்ப்பில், தாக்குதலில் ஈடுபட்ட தமிழனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 2ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 2 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார். ஜெயலட்சுமியை விடுதலை செய்தார்.