மூவருக்கு டெங்கு பாதிப்பு
கம்பம்: கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த சங்கிலி 51 , கார்த்தி 20 ஆகியோருக்கு இரண்டு நாட்களுக்கு முன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். சின்னச்சாமி என்பவருக்கு அறிகுறி இருப்பதால் மூவரும் தேனி அரசுமருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். டெங்கு பாதித்த பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.