கழிவுநீர் வடிகால் பாலத்தில் அடைப்பு
ஆண்டிபட்டி:கொண்டம நாயக்கன்பட்டியில் டி.எஸ்.பி., அலுவலகம் எதிரே உள்ள சாக்கடை சிறு பாலத்தில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால் கழிவு நீர் வெளியேறி சுகாதாரப் பாதிப்பு ஏற்படுகிறது.பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சாக்கடை சிறு பாலத்தில் கழிவுநீர் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது. சிறு மழை பெய்தாலும் மழை நீருடன் கழிவு நீர் கலந்து டி.எஸ்.பி., அலுவலக வளாகத்தில் புகுந்து விடுகிறது. வடிகாலை சீரமைத்து பாலம் உயர்த்தி கட்டுவதற்கு பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.