மாவட்டத்தில் ஒரே நாளில் 141 பேர் ஓய்வு
தேனி: மாவட்டத்தில் 42 ஆசிரியர்கள் உட்பட 141 பேர் நேற்று ஒரே நாளில் பணி ஓய்வு பெற்றனர்.தமிழகத்தில் நேற்று 8ஆயிரத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றனர். தேனி மாவட்டத்தில் வருவாய்த்துறையில் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் நேரு உட்பட இருவர், போலீசில் டி.எஸ்.பி., கனகராஜ் உட்பட 6 பேர், வனத்துறையில் இருவர், பள்ளிக்கல்வித்துறையில் 42 ஆசிரியர்கள், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 3 பேர், சத்துணவு திட்டத்தில் 7 பேர், நீதிமன்ற பணியாளர்கள் 5 பேர், சுகாதாரத்துறையில் 7 பேர், நகராட்சி பணியாளர்கள் 4 பேர், வேளாண், தோட்டக்கலை, ஆவின், தீயணைப்புத்துறையில் தலா ஒருவர் என மொத்தம் 93 அரசு ஊழியர்கள் நேற்று ஒரே நாளில் ஓய்வு பெற்றனர்.