உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் ஸ்டேஷனில் கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

போலீஸ் ஸ்டேஷனில் கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

தேவதானப்பட்டி:போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து போதையில் போலீசாரை கத்தியை காட்டி மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர்.தேனி மாவட்டம், தேவதானப்பட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி, 26. அதே பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர்கள், தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், போலீசாரை போதையில் அவதுாறாக பேசினர்.ஏட்டு கணேசன் கண்டித்து, அவர்களை எச்சரித்தார். அப்போது, இருவரும் அவரை பணி செய்யவிடாமல் தடுத்தனர். இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த முத்துசாமி, 'நாங்கதாண்டா இந்த ஏரியாவுல பெரிய ரவுடி; எங்கள் மீது வழக்கு போட்டால் கொல்லாமல் விடமாட்டோம்' எனக்கூறி, போலீசாருக்கு மிரட்டல் விடுத்தனர்.ஏட்டு கணேசன் புகாரில், எஸ்.ஐ., ஜான் செல்லத்துரை மற்றும் போலீசார் விசாரித்து முத்துச்சாமி உட்பட இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ