7 ஆர்.ஐ.,களுக்கு பதவி உயர்வு
தேனி:மாவட்டத்தில் 7 சீனியர் ஆர்.ஐ.,க்களை துணைதாசில்தாராக தற்காலிக பதவி உயர்வு வழங்கி கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த உத்தரவில் தற்காலிக பதவி உயர்வை எதிர்காலத்தில் வெளியிடப்படும் துணைதாசில்தார் பட்டியலுக்கு முன்னுரிமை கோர முடியாது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதவி உயர்வு பட்டியல் வழக்கின் தீர்ப்பிற்கு உட்பட்டதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.