உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆண்டிபட்டியில் இன்று ஆதார் மையம் செயல்படும்

ஆண்டிபட்டியில் இன்று ஆதார் மையம் செயல்படும்

தேனி, : மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ஆதார் சேவை மையம் செயல்படுகிறது. இங்கு புதிதாக ஆதார் பதிவு செய்தல், முகவரி மாற்றம், பெயர் திருத்தம், புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டத்தில் ஒவ்வொரு ஞாயிறும், ஏதாவது ஒரு தாலுகா அலுவலகத்தில் செயல்படும் ஆதார் மையத்தை அதிகாரிகள் செயல்படுத்தி வருகின்றனர். அதன்படி ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையம் இன்று (செப்.,22) வழக்கம் போல் செயல்படும். பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி