பள்ளி திறப்பு நாளிலே புத்தகம் வழங்க ஏற்பாடு
தேனி: தமிழகத்தில் நாளை (ஜூன் 2) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளி திறப்பு நாளில் புத்தகங்கள் வழங்க கல்வித்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் 144 பள்ளிகளுக்கு மாணவர்களுக்கு தேவையான இலவச புத்தகங்கள் அனுப்பும் பணி முடிவடைந்துஉள்ளது. இதனால் பள்ளிதிறக்கும் நாளில் காலையில் மாணவர்களுக்கு வினியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பள்ளிகள் திறப்பை முன்னிட்டு புத்தக பை விற்பனை செய்யும் கடைகள், ஸ்டேஷனரி கடைகளில் மாணவர்கள் பெற்றோர்களுடன் வந்து நோட்டுகள், பேனா, பென்சில்,பிற எழுதும் உபகரணங்கள், புத்தகப்பை, அட்டைகள் வாங்கி சென்றனர். வியாபாரிகள் கூறுகையில், நோட்டு புத்தகங்கள் இந்தாண்டு விலை உயர்வு இல்லை. இதனால் வழக்கமான வியாபாரத்தை விட கூடுதலாக உள்ளது என்றனர்.