விருது வழங்கும் விழா
கூடலுார்: கூடலுார் பாலா ஸ்போக்கன் இங்கிலீஷ் அகாடமியில் வருடாந்திர விருது வழங்கும் விழா ஆசிரியர்கள் சின்னத்துரை, பிரதீப், முருகன் ஆகியோர் தலைமையில் நடந்தது. பாலா அகாடமி நிறுவனர் பாலகுமார் வரவேற்றார். ஆங்கிலம் மற்றும் தமிழ் பேச்சு, கட்டுரை, கவிதை உள்ளிட்ட பல்வேறு பிரிவு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. பெற்றோர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.