விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேனி : தேனி பிரசன்டேசன் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில், பாதுகாப்பான விபத்தில்லா தீபாவளியை எவ்வாறு கொண்டாடுவது என விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். தேனி நிலைய அலுவலர் (போக்குவரத்து) நாகராஜன், தீயணைப்பு வீரர்கள் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் மாணவிகள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.