உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கனிமவளம் திருட்டு இருவர் மீது வழக்கு

கனிமவளம் திருட்டு இருவர் மீது வழக்கு

பெரியகுளம்,: பெரியகுளம் ஜெயமங்கலம் ரோட்டில் சப்-கலெக்டர் ரஜத்பீடன் வாகனங்களில் கனிமவளம் திருட்டு சம்பந்தமான சோதனையில் ஈடுபட்டார். பெரியகுளம் பகவதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த லாரி டிரைவர் அழகுபாண்டி,' டிரான்ஸிட் பாஸ்'-ஐ முறைகேடாக பயன்படுத்தி, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் விதமாக கனிமத்தை மூன்றரை டன் கற்களுடன் கிராவல் மண் லாரியில் கொண்டு சென்றதை கண்டறிந்தார். வி.ஏ.ஓ., முருகன் புகாரில், இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த், அழகுபாண்டி, லாரி மற்றும் குவாரி உரிமையாளர் சன்னாசி மீது வழக்கு பதிவு செய்தார்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை