உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறப்பு நிலை பேரூராட்சி இல்லாததால் செயல் அலுவலர்கள் பதவி உயர்வில் சிக்கல்

சிறப்பு நிலை பேரூராட்சி இல்லாததால் செயல் அலுவலர்கள் பதவி உயர்வில் சிக்கல்

கம்பம்: மாவட்டத்தில் ஸ்பெஷல் கிரேடு பேரூராட்சிகள் இல்லாததால் இங்கு பணியாற்றும் செயல் அலுவலர்கள் பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் உள்ளது.உள்ளாட்சி அமைப்புகளில் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் மக்கள் தொகை, வருவாய் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் கிரேடு வாரியாக தரம் பிரித்துள்ளனர்.பேரூராட்சிகளில் இரண்டாம் நிலை, முதல் நிலை, தேர்வு நிலை, சிறப்பு நிலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் நிலையில் பணியாற்றி, பின் படிப்படியாக அனைத்து நிலை பேரூராட்சிகளிலும் பணியாற்றும் செயல் அலுவலர்களுக்கு மட்டுமே உதவி இயக்குநர் பதவி உயர்வு கிடைக்கும்.தேனி மாவட்டத்தில் 22 பேரூராட்சிகளில் சிறப்பு நிலை எனும் ஸ்பெஷல் கிரேடு பேரூராட்சி ஒன்று கூட இல்லை. சிறப்பு நிலை இல்லாததால், இம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி செயல் அலுவலர்கள் பெரும்பாலானோர், சிறப்பு நிலைக்கு தொலை தூர மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. அதற்குள் பணி ஓய்வு பெறும் வயதை நெருங்குவதால், பெரும்பாலானோர் பதவி உயர்வே வேண்டாம் என்று எழுதி கொடுத்து விடுகின்றனர்.இது தொடர்பாக செயல் அலுவலர்கள் கூறுகையில், தமிழகத்தில் 490 பேரூராட்சிகள் உள்ளன. இரண்டாம் நிலை 59, முதல் நிலை 190, தேர்வு நிலை 179, சிறப்பு நிலை 62 என உள்ளது. தமிழகம் முழுவதுமே சிறப்பு நிலைபேரூராட்சிகள் குறைவாக இருப்பதால், பெரும்பாலான செயல் அலுவலர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு முன்னரே ஓய்வு பெறும் நிலை உள்ளது . எனவே அனைத்து மாவட்டங்களிலும் கணிசமான எண்ணிக்கையில் சிறப்பு நிலை பேரூராட்சிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ