எம்ப்ளாயீஸ் யூனியன் மாநாடு
தேனி: தேனி சிவாஜி நகரில் தமிழ்நாடு ஜெனரல் எம்ப்ளாயீஸ் யூனியன் மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்டத் தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார்.மாவட்ட பொதுச் செயலாளர் ராஜதுரை , சலவை தொழிலாளர் சங்கத் தலைவர் மாடசாமி,சாலையோர வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.தேனி நகரில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகளை, பிளக்ஸ் பேனர்களை போர்க்கால அடிப்படையில்அகற்ற வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு தகுதி யானவர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.