அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி: தேனி சார்நிலை கருவூலம் அருகே அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில்,' மக்கள் நலப்பணியாளர் சங்க போராட்டத்திற்கு ஆதாரவாகவும், போராட்டத்திற்கு சென்றவர்களை வீடுகளில் வைத்து கைது செய்த போலீசாரை கண்டித்தும்,' ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் சர்ஜிலாபானு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் காமேஸ்வரன், நிரஞ்சனாதேவி, ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகி சின்னசாமி, வேளாண் துறை அலுவலர் சங்க நிர்வாகி காளிதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.