உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி நிகழ்ச்சி

 பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி நிகழ்ச்சி

தேனி: அரசுப்பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களுக்கு உயர்கல்வி உங்கள் இலக்கு' என்ற தலைப்பில் கருதரங்கம், கண்காட்சி நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.பிப்ரவரி முதல்வாரத்தில் நடைபெற உள்ள கண்காட்சியில் பிளஸ் 1 மாணவர்களுக்கு உயர்கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்களும் பங்கேற்கலாம். கருத்தரங்கில் கல்லுாரிகளில் உள்ள பாடப்பிரிவுகள், அவை தொடர்பான வேலைவாய்ப்புகள், முன்னாள் மாணவர்களின் அனுபவங்கள் பகிர்ந்து கொள்வார்கள். கண்காட்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை