ராஜவாய்க்காலில் தவறி விழுந்தவர் பலி
தேனி: போடி குலாளர்பாளையம் அரவிந்த் 30. இவர் மதுபோதையில தேனி மதுரை ரோடு டாஸ்மாக் கடை உள்ள சந்தில் நேற்று இரவு படுத்திருந்தார். தவறி வாய்க்காலில் விழுந்து காயமடைந்து இறந்தார். தேனி தீயணைப்புத்துறையினர் இறந்த அரவிந்த் உடலை மீட்டு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.