கேரளாவில் அக்.18 வரை பலத்த மழை வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை
மூணாறு : கேரளாவில் அக்.18 வரை பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்தது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று முடிவுக்கு வர உள்ள நிலையில், வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், அக்.18 வரை பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று முன்னெச்சரிக்கை விடுத்தது.ரெட் அலர்ட்: இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு நேற்று கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட், கண்ணூர், காசர்கோடு, பாலக்காடு, பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான எல்லோ அலர்ட் விடுக்கப்பட்டது.நேற்று (அக். 15) : மலப்புரம், கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் .பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட் .இன்று (அக். 16): இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் .பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட் .நாளை அக்.17: எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் .திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட் .அக்.18: கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட் .