திருமாவளவன் மீது அவதுாறு; ஒருவர் கைது
தேவதானப்பட்டி; தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தீபன் சக்ரவர்த்தி 41. வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறு வார்த்தைகளால் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டார். இதுகுறித்து அம்பேத்கர் நகரைச் சேர்ந்த வி.சி., ஒன்றிய துணை அமைப்பாளர் காமாட்சி தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். தீபன் சக்கரவர்த்தியை எஸ்.ஐ., ஜான்செல்லத்துரை மற்றும் போலீசார் கைது செய்தனர்.