மேலும் செய்திகள்
நர்சிங் கல்லுாரி மாணவி மாயம்
22-Jan-2026
ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டி அருகே ஆசாரிபட்டியை சேர்ந்தவர் பாலாசிகாமணி, இவரது மகள் மதுபாலா 17, ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கணித பாடத்தில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் மன வருத்தத்தில் இருந்த மதுபாலா இரு நாட்களுக்கு முன் உடலில் தீ வைத்துக் கொண்டார். அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் தீக்காயம் அடைந்தவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இறந்தார். தாய் பூபதி புகாரில் ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.
22-Jan-2026