தபால்துறை குறைதீர் கூட்டம்
தேனி : ''தேனி கோட்ட தபால்துறையின் சார்பில் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செப்.16ல் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.'' என, கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தபால்துறை சார்பில் தேனி தபால்துறை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு, தபால் பணிகள் குறித்த குறைகள், தபால் சேவையை மேம்படுத்தும் ஆலோசனைகள் ஏதும் இருப்பின் உரிய விபரங்களுடன் தெரிவிக்கலாம். நேரில் வர இயலாதவர்கள் dotheni.indiapost.gov.inஎன்ற தபால்துறையின் மின்னஞ்சல் முகவரியில் தங்களது குறைகள், ஆலோசனைகளை செப்.12க்கும் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.