உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வருவாய்த்துறையினர் வேலை நிறுத்தம்

வருவாய்த்துறையினர் வேலை நிறுத்தம்

தேனி:வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 2வது நாளாக வேலை நிறுத்த ஈடுபட்டதால் அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டன. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த உரிய அவகாசம், நிதி ஒதுக்கீடு, உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.சீனியாரிட்டி நிர்ணயம் செய்வதில் குளறுபடிகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று முன்தினம் வேலை நிறுத்தத்தை துவக்கினர். நேற்றும் 189 பேர் பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் கலெக்டர் அலுவலகம்.ஆர்.டி.ஓ., தாலுகா அலுவலகங்கள் குறைந்த அலுவலர்களுடன் இயங்கின. இதனால் வழக்கமான அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. மொத்தம் உள்ள 572 பேரில் 189 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை