டூவீலர் திருட்டு
போடி: போடி அருகே திம்மிநாயக்கன்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் நசீர் 40. இவர் நேற்று முன்தினம் இரவு டூவீலரை வீட்டின் முன்பாக நிறுத்தி விட்டு வீட்டில் தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது டூவீலர் காணாமல் போனது தெரிந்தது. நசீர் புகாரில் போடி தாலுகா போலீசார் காணாமல் போன டூவீலரை தேடி வருகின்றனர்.