உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / இஸ்ரோ விஞ்ஞானிகளில் பலர் தமிழ் வழி கல்வி பயின்றவர்கள்

இஸ்ரோ விஞ்ஞானிகளில் பலர் தமிழ் வழி கல்வி பயின்றவர்கள்

திருநெல்வேலி:''இஸ்ரோ விஞ்ஞானிகளில் பலர் தமிழ் வழி கல்வி பயின்றவர்கள். எனவே தமிழ் வழி கல்வி முறை சிறந்தது,'' என, திருநெல்வேலியில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி., பிறந்தநாளையொட்டி அவரது மணிமண்டபத்தில் சிலைக்கு மாலையணிவித்த சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.அவர் கூறியதாவது: தமிழக அரசின் பாடத்திட்டம் குறித்து கவர்னர் ரவி கருத்து தெரிவித்து உள்ளார். இத்தகைய தர்க்கமான முறையில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என பலமுறை அவரிடம் தெரிவித்துள்ளோம். தமிழக அரசின் பாடத்திட்டம் குறித்து அவருக்கு முழுமையாக தெரியுமா என தெரியவில்லை. அவர் சந்தேக கண்ணோடு பார்க்கிறாரா என்று தெரியவில்லை. சந்திரயான் 3 திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதில் முக்கிய பொறுப்பு வகித்த வீரமுத்துவேல் தமிழ் வழி கல்வியில் பயின்றவர். இஸ்ரோ தலைவராக இருந்த கன்னியாகுமரியை சேர்ந்த சிவனும் தமிழ் வழியில் பயின்றவர். மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் பலரும் தமிழ் வழி கல்வியில் பயின்றவர்கள். எனவே தமிழ் வழி கல்வி முறை சிறந்தது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sivagiri
செப் 06, 2024 16:31

அதெல்லாம் தீயமுக 1967 வர்றதுக்கு முன்னாடி . . . அப்போ இருந்த தமிழ் ஆங்கில பாடங்களில் பாதி கூட இன்று இல்லை . . . அப்போதிருந்த ஒழுக்க நெறிமுறைகளில் துளி அளவும் இப்போது இல்லை . . .


Sridhar
செப் 06, 2024 10:42

மாணவன் தனது தின்றாலும் உழைப்பினால் உம் உயர்வு அடைகிறார்கள். பள்ளியின் மாணவர்கள் அனைவரும் அனைத்து துறையிலும் உயர்ந்து உள்ளனரா என்று பார்த்தால் தரவுகள் உண்மை நிலையை உணர்த்தும்


Duruvesan
செப் 06, 2024 07:38

ஆமாம் இஸ்ரோ ஏன் நாசா ல கூட தமிழ்ல தான் படிச்சாங்கலம், இவ்வளவு பேசறியே ஸ்டாலின் வீட்டு பிள்ளைகள் இனி தமிழ் மட்டுமே படிக்கும், சன் பிலோவேர் ஸ்கூல் இனி தமிழ் மட்டும்தா போதிக்கும்னு சொல்லு பாக்கலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை