உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / டாஸ்மாக் ஊழியர் உடல் உறுப்புகள் தானம்

டாஸ்மாக் ஊழியர் உடல் உறுப்புகள் தானம்

திருநெல்வேலி : விபத்தில் இறந்த டாஸ்மாக் ஊழியரின் உடல் உறுப்புகள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டன.தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் மகாராஜன் 49. டாஸ்மாக் ஊழியர். கடந்த 31ம் தேதி ஆறுமுகநேரி செக்போஸ்ட் அருகே ஆட்டோவில் வந்தபோது தவறி விழுந்து காயமுற்றார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மூளை சாவடைந்ததால் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினர் சம்மதித்தனர். மகாராஜனின் தோல் மதுரை தனியார் மருத்துவமனைக்கும், இரு கரு விழிகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், கல்லீரல் திருச்சி தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. டீன் ரேவதி பாலன் தலைமையில் டாக்டர்கள் அவரது உடலுக்கு மரியாதை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை