உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து பெண் பலி

எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து பெண் பலி

திருநெல்வேலி,:திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே ஆனைகுடியை சேர்ந்தவர் தேவதாஸ். கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். துாத்துக்குடி மாவட்டம், இடைச்சிவிளையைச் சேர்ந்த ஜான்சி பாப்பா, 45. கோழிப்பண்ணையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.தேவதாசுக்கு சொந்தமான இரண்டு எலக்ட்ரிக் டூ - வீலர்கள், பேட்டரிகள் கோழிப்பண்ணையில் உள்ள அறையில் சார்ஜ் ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்தன. பிப்., 15 காலையில் அங்கு ஜான்சி பாப்பா சென்றபோது, ஒரு பேட்டரி திடீரென வெடித்தது. அவர் படுகாயமுற்றார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ