உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / விடுதியில் மாணவிக்கு பாலியல் தொல்லை 2 பேர் கைது

விடுதியில் மாணவிக்கு பாலியல் தொல்லை 2 பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ஒரு தொண்டு நிறுவனம் சார்பில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான விடுதி உள்ளது. 15 பேர் தங்கியுள்ளனர். அங்கு பணிபுரியும் வார்டன் அபூபக்கர் 46 என்பவர், 14 வயது மாணவியிடம் தவறான முறையில் நடந்து கொண்டார். அதிர்ச்சி அடைந்த அம்மாணவி, விடுதியின் பெண் வார்டன் வகிதாவிடம் 43, இதுகுறித்து தெரிவித்தபோதும், அவர் யாரிடமும் சொல்ல வேண்டாம் எனக் கூறியுள்ளார். பின் மாணவி பெற்றோரிடம் சம்பவத்தை தெரிவித்தார். அவர்கள் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் கோமதி விசாரித்தார். அபூபக்கர் மற்றும் வகிதா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து இருவரும் கைது செய்யப் பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !