இறந்து கரை ஒதுங்கிய டால்பின்
திருநெல்வேலி:கூடங்குளம் அருகே இறந்த நிலையில், டால்பின் மீன் கரை ஒதுங்கியது. திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே காரிக்கோவில் கடற்கரையில் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியதை மீனவர்கள் கண்டனர். உடனடியாக கடலோர போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும் வனத்துறையினரும் டால்பினை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அது எவ்வாறு இறந்தது என்பது குறித்து தெளிவுப டுத்த கால்நடை மருத்துவ நிபுணர்கள் உடற்கூறாய்வு நடத்தி னர்.