உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பெண் கொலை வழக்கு 3 பேர் சிக்கினர்

பெண் கொலை வழக்கு 3 பேர் சிக்கினர்

திருநெல்வேலி : பாளை. யில் பெண் கொலை வழக்கில் மூன்று பேர் சிக்கினர்.பாளை. சீனிவாசநகர் ஆறாவது மேற்குத்தெருவை சேர்ந்தவர் முத்தையா. இவரும், மதுரையை சேர்ந்த பரமேஸ்வரியும்(48) கடந்த 3 ஆண்டுகளாக சேர்ந்து வசித்தனர். பரமேஸ்வரியின் முதல் கணவர் ராமமூர்த்தி இறந்து விட்டார். பரமேஸ்வரிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருந்தனர். மகன் இறந்து விட்டான். மகளுக்கு திருமணமாகி விட்டது.முத்தையா பெருமாள்புரத்தில் கார் டிரைவராக உள்ளார். இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் உள்ளான். கடந்த 8ம்தேதி இரவு வீட்டில் பரமேஸ்வரி மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் கைகள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுக்கிடந்தார்.இதுகுறித்து பாளை. ஐகிரவுண்ட் ஸ்டேஷன் போலீசார் விசாரித்து வந்தனர். சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள், பரமேஸ்வரிக்கு அறிமுகமானவர்கள் என பலரிடம் விசாரணை நடந்தது.சம்பவம் தொடர்பாக பாளை. கோட்டூர் ரோடு பகுதியை சேர்ந்த ஒருவர் உட்பட மூவர் தனிப்படை போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கச்செயின் மீட்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் கைது செய்யப்படுவர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ