மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
தென்காசி : செங்கோட்டை அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். செங்கோட்டை அருகே தவணை வடக்கு காலனியை சேர்ந்தவர்கள் காளிமுத்து, பேச்சிமுத்து. இவர்கள் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வருகிறது. இதனால் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இவ்விருவர் தலைமையிலும் சிலர் கோஷ்டியாக மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த காளிமுத்து, பேச்சிமுத்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.
இச்சம்பவம் பற்றி இருதரப்பினரும் செங்கோட்டை போலீசில் புகார் செய்தனர். காளிமுத்து கொடுத்த புகாரின் பேரில் பேச்சிமுத்து, அவரது தம்பி அருள்ராஜ், கதிரவன் காலனி இசக்கிமுத்து மீதும் பேச்சிமுத்து கொடுத்த புகாரின் பேரில் காளிமுத்து, அவரது மகன்கள் ராமர், முருகன் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் ராமர், முருகன், இசக்கிமுத்து, அருள்ராஜை போலீசார் கைது செய்தனர்.
29-Sep-2025
25-Sep-2025