மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி : நெல்லையில் 'ஆள்மாறாட்டத்தில்' பால் வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். மேலப்பாளையம் அருகே மேலநத்தம் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் சுப்பு(48). பால் வியாபாரி. கடந்த மார்ச் 9ம்தேதி இரவு தச்சநல்லூருக்கு மகள் வீட்டுக்கு பைக்கில் சுப்பு சென்று கொண்டிருந்த போது உடையார்பட்டி அருகே ஒரு கும்பல் வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். 'ஆள்மாறாட்டத்தில்' வேறு ஒருவரை கொலை செய்வதற்கு பதிலாக சுப்பு தீர்த்துக்கட்டப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக கூலிப்படை நபர்கள் கம்மாளன்குளத்தை சேர்ந்த பெத்தபெருமாள், சுத்தமல்லியை சேர்ந்த சுந்தர் கைது செய்யப்பட்டனர். கொலை கச்சிதமாக செய்ய கூலிப்படைக்கு பணம் அளிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்தனர்.
வழக்கு தொடர்பாக ரமேஷ், ராஜூ, முருகேசன், சங்கரநாராயணன் ஆகியோர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். கடந்த 29ம்தேதி எஸ்டேட் மணி தூத்துக்குடி கோர்ட்டில், நேற்றுமுன்தினம் வெங்கடேசன் நான்குநேரி கோர்ட்டில் சரண் அடைந்தனர். சரண் அடைந்தவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சரண் அடைந்தவர்கள் விசாரணையில் தெரிவிக்கும் தகவல்கள் அடிப்படையில் வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கில் மேலும் சிலரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
29-Sep-2025
25-Sep-2025