உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஆழ்வார்குறிச்சி சுற்றுச்சூழல்மையத்தில் தேசிய கருத்தரங்கு

ஆழ்வார்குறிச்சி சுற்றுச்சூழல்மையத்தில் தேசிய கருத்தரங்கு

ஆழ்வார்குறிச்சி:ஆழ்வார்குறிச்சி சுற்றுச் சூழல் பல்கலை.,யில் தேசிய கருத்தரங்கு நடக்கிறது.ஆழ்வார்குறிச்சி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., பரமகல்யாணி சுற்றுசூழல் அறிவியல் மையத்தில் உயிர் தொழில்நுட்பவியல் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு வரும் செப்டம்பர் 22ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது.நிலைத்த வேளாண்மைக்கான உயிர்தொழில்நுட்ப உத்திகள் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. கருத்தரங்கில் கலந்து கொள்ள விருப்பமுடைய விவசாயிகள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் பரமகல்யாணி சுற்றுசூழல் அறிவியல் மையத்தை தொடர்பு கொள்ளலாம் என பேராசிரியை உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்