உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மூவர் தூக்கு தண்டனையை ரத்து செய்யபாளை., யில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மூவர் தூக்கு தண்டனையை ரத்து செய்யபாளை., யில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி:பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்குதண்டனையை ரத்துசெய்ய, தமிழக முதல்வர் மத்திய அரசை வலியுறுத்தக் கோரி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பாளை., யில் நடந்தது.மள்ளர் மீட்புக் களம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு செந்தில் மள்ளர் தலைமை வகித்தார். கலைப்பிரிவு செயலாளர் தமிழ்செல்வன், தமிழ்மல்லன், மாநகர செயலாளர் சுப்பையா குடும்பன் முன்னிலை வகித்தனர். தமிழர் களம் தலைவர் அரிமாவளவன், மள்ளர் சங்கம் வன்னியக்குடும்பன், நிர்வாகிகள் செல்லையா, பொன்ராவணன், தமிழீழன், மகளிரணி பொறுப்பாளர் வெற்றிக்கொடி, தமிழ் சான்றோர் பேரவை சுதர்ஸன், மாவட்ட பொறுப்பாளர் சக்திபிரபாகரன், டேவிட்ராசு, பொருளாளர் சாமிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை மள்ளர் மீட்புக் களம் ஒருங்கிணைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை