உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / சேரன்மகாதேவியில் ஜெனிவா ஒப்பந்த நாள் பேரணி

சேரன்மகாதேவியில் ஜெனிவா ஒப்பந்த நாள் பேரணி

திருநெல்வேலி:சேரன்மகாதேவியில் ஜெனிவா ஒப்பந்த நாள் பேரணி நடந்தது.சேரன்மகாதேவி கல்வி மாவட்டம் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜெனிவா ஒப்பந்த நாள் பேரணி நடந்தது. மாவட்ட கல்வி அலுவலரும் (பொறுப்பு) கல்வி மாவட்ட ஜெஆர்சி அமைப்பாளருமான கிரேஸ் அன்ன ஹெலினா கொடியேற்றி பேரணியை துவக்கி வைத்தார். இணை கன்வீனர் பெருமாள் ஜெனிவா ஒப்பந்த நாள் பற்றி மாணவர்களுக்கு விளக்கினார்.நிகழ்ச்சியில் என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் ஆறுமுகசாமி, உதவி தலைமை ஆசிரியர் இக்னேஷியா, சுப்புலெட்சுமி, ஜெஆர்சி கவுன்சிலர் முத்துலட்சுமி கலந்து கொண்டனர். பேரணி பெரியார் பள்ளியில் துவங்கி பஸ் ஸ்டாண்ட் வழியாக நகர் முழுவதும் சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ