மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
ஆலங்குளம்:உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் புறநகர் தெற்கு மாவட்ட அதிமுகவினர் விருப்ப மனு வழங்க வரும் 8ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு மாவட்ட செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:-தமிழக முதல்வரும், பொது செயலாளருமான ஜெயலலிதா உத்தரவின்படி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள அதிமுகவினர் ஆர்வமுடன் விருப்ப மனு அளித்து வருகின்றனர். வரும் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை ஆலங்குளம், அம்பை, நான்குநேரி, ராதாபுரம் தொகுதிகளை சேர்ந்த அதிமுகவினர் ஆலங்குளம் எம்எல்ஏ அலுவலகத்தில் விருப்ப மனுவை அளிக்கலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
29-Sep-2025
25-Sep-2025