உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பாப்பாக்குடி அருகே பிளம்பர் தற்கொலை

பாப்பாக்குடி அருகே பிளம்பர் தற்கொலை

திருநெல்வேலி:பாப்பாக்குடி அருகே பிளம்பர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.பாப்பாக்குடி அருகே மேல பாப்பாக்குடி தேரடித்தெருவை சேர்ந்த சங்கரன் மகன் முருகன்(38). பிளம்பர். முருகனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. நேற்றுமுன்தினம் அவர் விஷம் குடித்தார். குடும்பத்தினர் அவரை பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.இதுகுறித்து பாப்பாக்குடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி விசாரணை நடத்தினார். மது குடிக்க குடும்பத்தினர் பணம் தர மறுத்ததால் மனமுடைந்து முருகன் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி