உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கார் மோதியதில் எரிந்தது டூவீலர்: ஒருவர் பலி

கார் மோதியதில் எரிந்தது டூவீலர்: ஒருவர் பலி

திருநெல்வேலி:திருநெல்வேலி முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளத்தை சேர்ந்தவர் ராஜசெல்வம் 54.டூ வீலர் ஓட்டிச் சென்ற இவர் திருநெல்வேலி --- நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் மூன்றடைப்பில் சிறிய பாதையில் ரோட்டை குறுக்காக கடக்க முயன்றார். அப்போது நாகர்கோவில் நோக்கி வேகமாக சென்ற கார் மோதி டூவீலரை சிறிது துாரம் இழுத்துச்சென்றது. இதில் டூவீலர் தீப்பற்றி எரிந்தது. விபத்தில் காயமுற்ற ராஜ செல்வம் சம்பவ இடத்திலேயே இறந்தார். மூன்றடைப்பு போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ