உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஏ டிவிஷன் வாலிபால் துவக்கம் எட்டு அணிகள் பலப்பரீட்சை

ஏ டிவிஷன் வாலிபால் துவக்கம் எட்டு அணிகள் பலப்பரீட்சை

சென்னை,: சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில், 'ஏ' டிவிஷன் வாலிபால் லீக் சாம்பியன்ஷிப் போட்டி, எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் அரங்கில், நேற்று மாலை 5:00 மணிக்கு துவங்கியது. இதில், நடப்பு சாம்பியனான எஸ்.ஆர்.எம்., பல்கலை, இந்தியன்வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, டி.ஜி., வைஷ்ணவ், வருமான வரி, ஐ.சி.எப்., உள்ளிட்ட, எட்டு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டிகள் 'ரவுண்ட் ராபின்' முறையில் நடக்கின்றன.நேற்று மாலை துவங்கிய முதல் நாள் போட்டியை, வருமான வரித்துறை கமிஷனர்கள் கருப்புசாமி, முரளி உள்ளிட்டோர் துவங்கினர்.போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு 5 லட்சம் ரூபாயும், சிறந்த வீரருக்கு 25,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.அதேபோல், ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த வீரருக்கு தங்க நாணயமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.தினமும் இரண்டு போட்டிகள் வீதம் தொடர்ந்து, 22ம் தேதி வரை நடக்கின்றன. இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில், வருமான வரித்துறை - ஐ.சி.எப்., மற்றும் ஐ.ஓ.பி., வங்கி - ஜி.எஸ்.டி., அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி