கருகிய நெற்பயிர் விவசாயி தற்கொலை
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே பெரியஓபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி, 64; விவசாயி. கடந்த 3ம் தேதி, நெற்பயிருக்கு தெளிக்கும் பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். நெற்பயிருக்கு அதிக அளவில் பூச்சி மருந்து அடித்ததில், இரண்டு ஏக்கர் நெற்பயிர்கள் கருகியதால் மன உளைச்சலில் இருந்த அவர், தற்கொலை செய்தது தெரிந்தது. ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.