உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மட்டம் தட்டி பேசியதால் கொலை செய்தோம் கும்மிடி வாலிபர் கொலையில் வாக்குமூலம்

மட்டம் தட்டி பேசியதால் கொலை செய்தோம் கும்மிடி வாலிபர் கொலையில் வாக்குமூலம்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே பில்லாக்குப்பம் கிராமத்தில் வசித்தவர் மணி மகன் அஜய், 22. வெல்டர். அவர் மீது சிப்காட் போலீசில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இரு தினங்களுக்கு முன், அதே கிராமத்தில் ஒதுக்குபுறமான மைதானத்தில் உடல் முழுதும் வெட்டு காயங்களுடன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.கொலை வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், கொலையில் ஈடுபட்ட அஜயின் நண்பர்களான பில்லாக்குப்பம் தனுஷ், 18, பொன்னேரி அடுத்த கோளூரை சேர்ந்த பசுபதி, 20 மற்றும் 17 வயது சிறுவர் இருவர் உட்பட் நான்கு பேரை கைது செய்தனர்.அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையயில் கூறியதாவது:தனஷ், அஜய் ஒன்றாக மது அருந்தும் போது, அஜய், தன்னை பெரிய ஆளாக காட்டிக்கொள்ளவதற்காக, தனுஷை மட்டம் தட்டி பேசுவது, கத்தி காண்பித்து மிரட்டும் தோரணையில் அடித்து பேசுதை வழக்கமாக கொண்டிருந்தார். பொறுமை இழந்த தனுஷ், அவரது நண்பரான பசுபதியுடன் சேர்ந்து அஜயை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.சம்பவம் நடந்த இடத்தில் ஏற்கனவே கத்தியை மறைத்து வைத்து, அஜயை மது அருந்த அழைத்தனர். அளவுக்கு அதிகமாக மது ஊற்றி கொடுத்து போதை ஏற்றியபின், கையில் வைத்திருந்த சிறிய கத்தியால் அஜய்யின் பின் தலையில், பசுபதி குத்தியுள்ளார். பின் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நான்கு பேரும் அஜயை சரமாரியாக குத்தி கொலை செய்தோம்.இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளனர்.கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் தனுஷ், பசுபதியை ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர். மற்ற இரு சிறுவர்களை, திருவள்ளூர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சென்னை, கெல்லீஸ் சிறுவர் சீர் திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தமிழ்வேள்
செப் 15, 2024 13:40

தவறாக பேசக் காரணம் தறுதலை தமிழ் சினிமாவும் நாக்கில் நரம்பின்றி பேசும் திராவிட சாக்கடை அரசியலும்.ஒழுக்கம் அற்ற மக்களை சவுக்கடி மற்றும் சாட்டையடி மட்டுமே திருத்தும்.திராவிட அரசியல் வாதிகள் முற்றழிக்கப்பட வேண்டும்.. அடுக்கு மொழியில் பேசித்திரிபவன் வாயை உடைத்தால் ஒழுங்காக இருப்பான்.தமிழகத்தில் மட்டும் அடுத்த 50 ஆண்டுகளுக்கு அடித்து உதைத்து கதற விடும் ராணுவ ஆட்சி வேண்டும்.இல்லையேல் திராவிட தமிழனுக்கு ஒழுக்கம் படியாது..


எவர்கிங்
செப் 14, 2024 21:07

சிறார்கள் என சட்டம் அடுத்த வருடம் குற்றவாளிகளை விடுவித்துவிடும் ..... கேவலமான சட்டங்கள்...... நிர்பயா கொலை வழக்கில் முகமது Afrose போல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை