உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வேம்புலி அம்மன் கோவிலில் ஜாத்திரை விழா

வேம்புலி அம்மன் கோவிலில் ஜாத்திரை விழா

திருவள்ளூர்:திருவள்ளூர் வேம்புலி அம்மன் கோவிலில், 10 நாள் ஜாத்திரை திருவிழா நிறைவடைந்தது.திருவள்ளூர் கிராம தேவதையான வேம்புலி அம்மன் திருக்கோவிலில் ஜாத்திரை உற்சவம், கடந்த 6 ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற விழாவில், வேம்புலி அம்மனுக்கு தினமும் அபிஷேகம் மற்றும் அம்மன் புறப்பாடு நடந்தது.விழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம், அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடந்தது. இரவு அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை