திருத்தணியில் முகாம் 1,200 பேருக்கு சிகிச்சை
திருத்தணி:திருத்தணியில் நடந்த நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில், 1,200 பேருக்கு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டன. திருத்தணி ஒன்றியம் அகூர் நத்தம் பகுதியில் இயங்கி வரும் டி.ஆர்.எஸ்., குளோபல் பள்ளி வளாகத்தில், மாவட்ட சுகாதார துறையின் சார்பில், நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நேற்று நடந்தது. மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் அம்பிகா தலைமை வகித்தார். இதில், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், பள்ளி நிர்வாக தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்று, மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர். முகாமில், கண், காது, எலும்பு, இதயம் உட்பட பல்வேறு நோய்களுக்கு இலவச பரிசோதனைகள், ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதவிர, ரத்த அழுத்தம், சி.டி.ஸ்கேன், கர்ப்பிணியருக்கு பரிசோதனை மற்றும் தடுப்பூசிகள் போடப்பட்டன. இதில், திருத்தணி நகரம் மற்றும் ஒன்றியத்தில் இருந்து, 1,200க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.