சமுதாய கூடம் அமைக்க கோரிக்கை
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது பெரியகளக்காட்டூர், சின்னகளக்காட்டூர், ஜே.எஸ்.ராமாபுரம் உள்ளிட்ட கிராமங்கள். இந்த கிராமங்களில் 8,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்த கிராமங்களைச் சேர்ந்தோர் தங்கள் குடும்ப விழாக்களை சின்னம்மாபேட்டை, தக்கோலம் உள்ளிட்ட் பகுதிகளில் தனியார் மண்டபங்களில் நடத்தி வருகின்றனர்.இதனால், அவர்களுக்கு பணச் செலவு அதிகரிப்பதோடு, நேரமும் விரயமாகிறது. இதனால், பகுதிவாசிகள் தங்கள் இல்ல சுபநிகழ்ச்சிகளை நடத்த கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, மக்களின் பணச்செலவை குறைக்கவும், வீண் அலைச்சலை போக்கவும் ஒன்றிய அதிகாரிகள் பெரியகளக்காட்டூர் ஊராட்சியில் சமுதாய கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.