மேலும் செய்திகள்
கிரேன் வாகனம் மோதி இருவர் படுகாயம்
23-Sep-2024
திருத்தணி, திருத்தணி பைபாஸ் சாலை செந்தமிழ் நகர் பகுதி சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி புஷ்பலதா, 45. இவர் நேற்று காலையில் சித்துார் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு வருவதற்கு பைபாஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்தார். அப்போது பூண்டி பகுதி சேர்ந்த ஹரேஷ், 28 என்பவர் ஸ்பெளண்டர் பிளஸ் இரு சக்கர வாகனத்தில் வந்தவரிடம், புஷ்பலதா லிப்ட் கேட்டு ஏறினர்.திருத்தணி- சித்துார் சாலை குண்டலுார் அருகே இரு சக்கர வாகனம் சென்ற போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இருவரும் சாலையில் விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த புஷ்பலதா இறந்தார். ஹரேஷ் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
23-Sep-2024