உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஏர்போர்ட் திட்ட அனுமதி விண்ணப்பித்தது டிட்டோ

ஏர்போர்ட் திட்ட அனுமதி விண்ணப்பித்தது டிட்டோ

சென்னை: சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துாரில் அமைக்கப்பட உள்ளது. இங்கிருந்து, ஆண்டிற்கு 10 கோடி பயணியரை கையாளும் வகையில் திட்டத்தை செயல்படுத்தப்படுகிறது. இதற்கான பணிகளை, 'டிட்கோ' எனும் தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்கொள்கிறது.இதற்காக இட அனுமதி கேட்டு, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம், 2023ல் டிட்கோ விண்ணப்பித்தது.இதற்கு, சமீபத்தில்அனுமதி வழங்கப்பட்டது.இதையடுத்து, கடந்த வாரம் சுற்றுச்சூழல் தாக்க ஆய்வுக்கு அனுமதி அளித்து, மத்திய சுற்றுச்சூழல் துறையும் உத்தரவிட்டது. இதையடுத்து, திட்ட அனுமதி கேட்டு, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம், நேற்று முன்தினம் டிட்கோ விண்ணப்பம் செய்துள்ளது.இது குறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விமான நிலைய திட்டத்திற்கு,இட அனுமதி, திட்ட அனுமதி, கட்டுமானம் முடிந்த பின் இயக்கத்திற்கு கொண்டு வருவது என, மூன்று அனுமதிகள் பிரதானம்.இதில், இட அனுமதி கிடைத்தாலே திட்டத்திற்கான அனைத்து அனுமதிகளும் சுலமாக கிடைக்கும். எனவே, திட்ட அனுமதி கிடைத்ததும், கட்டுமான பணிகளுக்கு தேவைப்படும் ஆயத்த பணிகள் துவங்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

SENTHIL NATHAN
அக் 18, 2024 13:08

இந்த ஏர்போர்ட் தேவை இல்லை. மதுரை திருச்சி கோவை சேலம் என்று மற்ற ஊர் ஏர்போர்ட்களை மேம்படுத்த வேண்டும். வருடத்திற்கு 10 கோடி பேர் என்றால் மாதத்திற்கு சுமார் 85 லட்சம். சென்னை மாநகர மக்கள் தொகையில் மாதம் 85 லட்சம் பேர் பறப்பவர்களா என்று யோசிக்க வேண்டும்.


முக்கிய வீடியோ