உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு ஊழியர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்

அரசு ஊழியர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் 'ஹெல்மெட்' அணிய வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விதிகளை மேம்படுத்தி, சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு, அனைத்து துறை அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தலைகவசம் அணிந்து வரவேண்டும்.மேலும், அனைத்து துறை அரசு ஊழியர்கள், அலுவலர்கள் தலைகவசம் அணிந்து வருவதை அந்தந்த துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வரும் அரசு ஊழியர் மற்றும் அலுவலர் மீது, சாலை பாதுகாப்பு விதிகளின்படி காவல் துறை வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை