சிறந்த திருநங்கை விருது விண்ணப்பம் வரவேற்பு
திருவள்ளூர்:சிறந்த திருநங்கையர் விருதுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருநங்கையர் தினம் அறிவிக்கப்பட்ட ஏப்.,15ல், திருநங்கை நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தோருக்கு, தமிழக அரசு 'சிறந்த திருநங்கை' விருது, தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெறும் சாதனையாளருக்கு, 1 லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.திருவள்ளூர் மாவட்டத்தில், திருநங்கையருக்கு சிறப்பான சேவை புரிந்தோர், https://awards.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யலாம்.அந்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில், வரும் பிப்.10க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.