பீர் பாட்டில் குத்து அகதிக்கு வலை
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச்சேர்ந்தவர்கள் கரண், 25, வசந்த், 26. இருவருக்கும் இடையே நேற்று முன்தினம்தகராறு ஏற்பட்டு,சிறிய கத்தியால் வசந்த் குத்தியதில் கரணுக்கு காயம் ஏற்பட்டது.சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், நேற்று மீண்டும் இருவருக்கும் இடையேதகராறு ஏற்பட்டது. இம்முறை, பீர்பாட்டிலை உடைத்து, வசந்த்தின் கழுத்தில் கரண் குத்தினார்.படுகாயம் அடைந்த வசந்த், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கும்மிடிப்பூண்டிசிப்காட் போலீசார் தலைமறைவாகியுள்ள கரணை தேடிவருகின்றனர்.