மேலும் செய்திகள்
கிரேன் வாகனம் மோதி இருவர் காயம்
23-Sep-2024
கிரேன் வாகனம் மோதி இருவர் படுகாயம்
23-Sep-2024
திருத்தணி, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த, 18 வயது கல்லுாரி மாணவி ஸ்கூட்டியில் நேற்று காலை திருத்தணி சென்றார். திருத்தணி - கன்னிகாபுரம் காலனி பகுதி அருகே ஸ்கூட்டி பழுதாகி நின்றது. கல்லுாரி மாணவி திருத்தணியில் உள்ள இரு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடைக்கு மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மெக்கானிக், சத்யா,31 என்பவர் ஸ்கூட்டியை பழுது பார்க்க சம்பவ இடத்திற்கு சென்றார். பின், மெக்கானிக் ஸ்கூட்டியை பழுதுபார்க்கும் போது, திடீரென ஸ்கூட்டி தீப்பிடித்து எரிந்தது.இதில் சத்யா, முகத்தில் லோசான தீக்காயத்துடன் அங்கிருந்து ஓடி வந்தார். அந்த பகுதியில் இருந்து குடியிருப்பு வாசிகள் தண்ணீருடன் வந்து தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் இரு சக்கர வாகனம் முழுதும் எரிந்து சாம்பாலானது. சத்யா திருத்தணி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
23-Sep-2024
23-Sep-2024