உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முதியவரை தாக்கிய நால்வர் மீது வழக்கு

முதியவரை தாக்கிய நால்வர் மீது வழக்கு

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த பழைய திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன், 51. இவர் கடந்த 25ம் தேதி தன் விவசாய நிலத்திற்கு நடந்து சென்றார். வசந்தம் நகர் மேம்பாலம் அருகே சென்றபோது அப்பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா, 21, செந்தில், ராஜசேகர் உட்பட நான்குபர் அவரிடம் தகராறு செய்தனர்.ஆத்திரமடைந்த அவர்கள் சீனிவாசனை ஆபாசமாக பேசி கல்லால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் தாலுகா போலீசார் நால்வர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி